Skip to content
Daily Tamilnadu
சனி, 29 ஆகஸ்ட் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
Advertisement

மாவட்டம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு ‘கனமழை’ எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுவாக உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழகத்தின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் வரும் 11-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்த வளிமண்டல மாற்றத்தால் இன்று (ஜனவரி 8) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவனத்திற்கு! இன்று இந்த மாவட்டங்களில் மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்துறை அறிவிப்பு!

தமிழகத்தின் மின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, கோவை, திருப்பூர், சேலம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் முக்கிய பகுதிகளில் இன்று (டிசம்பர் 24) காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தின் கரையாம்பாளையம் பகுதிகள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகள். அதேபோல், சேலம் மாவட்டத்தின் தோப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், விழுப்புரம் மாவட்டத்தின் தாயனூர் சுற்றுப்புறப் பகுதிகளிலும் இன்று […]
Advertisement

தமிழக பள்ளிகளுக்கு இன்று முதல் அரையாண்டு விடுமுறை: பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 10 முதல் நடைபெற்று வந்த அரையாண்டுத் தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று (டிசம்பர் 24) முதல் ஜனவரி 4-ஆம் தேதி வரை 12 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்குப் பின் ஜனவரி 5-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், இந்த இடைப்பட்ட காலத்தில் மாணவர்களுக்கு எந்தவிதமான சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அதிரடி […]

2026 சட்டப்பேரவை தேர்தல்: SIR பணிக்கு கூடுதல் அதிகாரிகள் நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகள் மற்றும் புதுப்பிப்புகளை சரிசெய்யும் பணிகளை விரைவாகவும் துல்லியமாகவும் நிறைவேற்றுவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை 81% வாக்காளர்களுக்கு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பணிகளை மேலும் விரைவுபடுத்தும் நோக்கில் 30 தொகுதிகளுக்கு கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள் சரிசெய்யப்படுவதோடு, புதிய […]

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 22ம் தேதி மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement

வானிலை அறிக்கை: 16 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை நீடிக்கும்!

சென்னை, அக்டோபர் 17: தமிழ்நாட்டில் நேற்று (அக்.16) வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், மற்றும் விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களில் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை ஆரம்பம்: நள்ளிரவு முதல் பரவலாக மழை!

சென்னை, அக்டோபர் 17: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து, நேற்று (அக்டோபர் 16) நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி: 3,190 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

சென்னை, செப்டம்பர் 26 – ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையையொட்டி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) மொத்தம் 3,190 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது. மாணவர்களின் காலாண்டு விடுமுறையையும் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 565 பேருந்துகளும், திங்கட்கிழமை 190 பேருந்துகளும், செவ்வாய்க்கிழமை 885 பேருந்துகளும் இயக்கப்படும். இன்று, கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு […]
Advertisement

நாளை நாமக்கல், கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரம்!

எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் த.வெ.க. தலைவர் விஜய். அதன் ஒரு பகுதியாக, நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 27), நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சார நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். த.வெ.க. வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாமக்கல் கே.எஸ். திரையரங்கம் அருகில் காலை 8.45 மணிக்கு விஜயின் பிரச்சாரம் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நண்பகல் 12.00 மணிக்கு பொதுமக்களை சந்தித்து பரப்புரை மேற்கொள்கிறார். விஜயின் வருகையை […]

த.வெ.க. மாநாட்டில் வெளியான முக்கிய தீர்மானங்கள்: மதுரையில் நடைபெற்ற 2-வது மாநில மாநாடு!

மதுரையில் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்ற த.வெ.க.வின் 2-வது மாநில மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில முக்கிய அம்சங்கள்: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டும் என வலியுறுத்தல் மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கத் தவறிய ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு கண்டனம் ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற […]
Advertisement
Advertisement