
மதுரையில் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்ற த.வெ.க.வின் 2-வது மாநில மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில முக்கிய அம்சங்கள்:
- பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு
- தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டும் என வலியுறுத்தல்
- மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கத் தவறிய ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு கண்டனம்
- ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தல்
- மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு திமுக அரசே காரணம் என கண்டனம்
- டிஎன்பிஎஸ்சி(TNPSC) உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நேர்மையான முறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தல்
இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள், த.வெ.க.வின் எதிர்கால செயல்பாடுகளுக்கு ஒரு முக்கிய வழிகாட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.