விளம்பரம்

தமிழக பள்ளிகளுக்கு இன்று முதல் அரையாண்டு விடுமுறை: பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 10 முதல் நடைபெற்று வந்த அரையாண்டுத் தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று (டிசம்பர் 24) முதல் ஜனவரி 4-ஆம் தேதி வரை 12 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறைக்குப் பின் ஜனவரி 5-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், இந்த இடைப்பட்ட காலத்தில் மாணவர்களுக்கு எந்தவிதமான சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாணவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்கும் அதே வேளையில், அவர்களை நீர்நிலைகள் உள்ளிட்ட அபாயகரமான இடங்களுக்குச் செல்ல விடாமல் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பகிர்வு:

0 கருத்துக்கள்

கருத்து தெரிவிக்க

Are you human? Please solve:Captcha


அறிவிப்புகள் 0
விளம்பரம்
விளம்பரம்
error: