வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு ‘கனமழை’ எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுவாக உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழகத்தின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் வரும் 11-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இந்த வளிமண்டல மாற்றத்தால் இன்று (ஜனவரி 8) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துக்கள்