வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 22ம் தேதி மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.