யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியான தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
சென்னை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் குடிமைப் பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், தமிழக அரசு சிறப்பு ஊக்கத்தொகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் உள்ள விவரங்கள் வருமாறு: மத்திய அரசினுடைய ஐ.ஏ.எஸ் (IAS), ஐ.பி.எஸ் (IPS) உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிக அளவில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ‘யு.பி.எஸ்.சி குடிமைப் பணித் தேர்வு […]