ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (08-05-2024)

இன்றைய நாள் (08-05-2024) :

குரோதி-சித்திரை 25-புதன்-வளர்பிறை

நல்ல நேரம்

காலை 9:30 – 10:30

மாலை 4:30 – 5:30

கௌரி நல்ல நேரம்

காலை 10:30 – 11:30

மாலை 6:30 – 7:30

நட்சத்திரம்

இன்று பிற்பகல் 02.11 வரை பரணி பின்பு கிருத்திகை

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

பூரம், உத்திரம்

சந்திராஷ்டமம் (ராசிப்படி)

சிம்மம் / கன்னி

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

பலதரப்பட்ட சிந்தனைகளால் அமைதியற்ற நிலை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக் கொடுத்துச் செயல்படவும். உடன் பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். உத்தியோக பணிகளில் அனுசரித்துச் செல்லவும். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

புதுவித பயணங்களின் மூலம் மனதில் தெளிவு ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். இரவு நேர பணிகளில் கவனத்துடன் செயல்படவும். புரியாத சில கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் விலகும். பொறுமை வேண்டிய நாள்.

மிதுனம்

பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நுட்பமான விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். விவசாய பணிகளில் அனுபவம் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.

கடகம்

கலை சார்ந்த பணிகளில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உங்கள் கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். அரசு பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். ஆர்வம் நிறைந்த நாள்.

சிம்மம்

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தான தர்ம செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். இழுபறியான வேலைகள் நிறைவு பெறும். தாயார் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்ப்பு விலகும் நாள்.

கன்னி

தந்தையிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. காப்பீடு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். வரவுகளில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். அசதி நிறைந்த நாள்.

துலாம்

சுபகாரிய பேச்சுவார்த்தை கைகூடும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். வெளியூர் வர்த்தக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

வழக்குகளில் நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சுபசெலவு நிறைந்த நாள்.

தனுசு

பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். இலக்கியம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் தெளிவு ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கவலை மறையும் நாள்.

மகரம்

கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். அலுவலகப் பணிகளில் அமைதி உண்டாகும். அரசு காரியத்தில் அனுசரித்துச் செல்லவும். மனதில் நேர்மறையான சிந்தனைகள் உண்டாகும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

கும்பம்

செய்யும் செயல்களில் திருப்தியான சூழல் அமையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். பாகப்பிரிவினையில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். தனம் நிறைந்த நாள்.

மீனம்

பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்த தன்மை விலகும். பணிபுரியும் இடங்களில் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக செயல்படவும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் ஆதாயம் கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ five = thirteen

Back to top button
error: