வைட்டமின் பி3 என்றும் அழைக்கப்படும் நியாசினமைடு, சருமத்திற்கு பல நன்மைகள் இருப்பதால் தோல் பராமரிப்புப் பொருட்களில் பிரபலமான பொருளாக மாறியுள்ளது. இந்த நீரில் கரையக்கூடிய வைட்டமின் தோலின் அமைப்பு, தொனி மற்றும் ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது, இது தோல் பராமரிப்பில் இன்றியமையாத பொருளாக அமைகிறது. நியாசினமைட்டின் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று சரும உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் திறன் ஆகும். இது எண்ணெய் சருமத்தின் தோற்றத்தை குறைக்க உதவுகிறது மற்றும் வெடிப்புகளைத் தடுக்கிறது. நியாசினமைடு அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது, இது முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு ஒரு சிறந்த மூலப்பொருளாக அமைகிறது. நியாசினமைடு தோல் தடுப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும் காட்டப்பட்டுள்ளது. இதன் பொருள் ஈரப்பதம் இழப்பைத் தடுக்க உதவுகிறது மற்றும் மாசு மற்றும் புற ஊதா கதிர்கள் போன்ற சுற்றுச்சூழல் அழுத்தங்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. தோலின் தடுப்புச் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம், நியாசினமைடு மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைக்கிறது…
Author: newsdesk
என்ஹெச்பிசி லிமிடெட்டின்(NHPC Ltd) (A Govt. of India Enterprise) ஒரு யூனிட்டான Subansiri லோயர் ஹைட்ரோ எலக்ட்ரிக் ப்ராஜெக்டில் 2023-24 ஆம் ஆண்டிற்கான 196l அப்ரெண்டிஸ் சட்டம், 196l இன் கீழ் தொழிற்பயிற்சி பெறுவதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள டிரேடுகளில் ITI தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மொத்த பயிற்சி இடங்கள்: 25 இடங்கள் வெல்டர் – 5 எலக்ட்ரீஷியன் – 5 ஃபிட்டர் -5 சர்வேயர் -2 தச்சர் – 3 பிளம்பர் – 5 வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை கல்வித்தகுதி: விண்ணப்பதாரர் அப்ரண்டிஸ் சட்டம், 1961 இன் படி அந்தந்த வர்த்தகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து ITI தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முடிவுக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். உதவித்தொகை: பயிற்சி காலத்தில் உதவித்தொகையாக ரூ. 7,700/- வழங்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பைக் காணவும்.…
கோடை காலத்தில், நீரேற்றமாக இருப்பது முக்கியம். எனவே, அன்னாசிப்பழத்தைப் பயன்படுத்தி அன்னாசிப்பழம் மில்க் ஷேக் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: அன்னாசி பழம் – 1 பால் – அரை கப் கிரீம் (வெண்ணிலா) – 1/4 கப் சர்க்கரை – 2 ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன் ஐஸ் துண்டுகள் – 1/2 கப் செய்முறை: மில்க் ஷேக் செய்ய தேவையான அளவு, அன்னாசி பழத்தை எடுத்து தோலுரித்து சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது, அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி தயார் செய்து கொள்ளவும். அதே சமயம் மில்க் ஷேக்கிற்கு தேவையான மற்ற பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ளவும். பிறகு, ஒரு மிக்ஸி ஜாடியை எடுத்து, அதனுடன் அரை கப் பால் மற்றும் அன்னாசி துண்டுகளை சேர்த்து நன்றாக அரைக்கவும். பழத்தை அரைக்கும் போது தண்ணீர் சேர்க்காமல் இருப்பது நல்லது.…
தொடர் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். மணிப்பூரில் பழங்குடியினர் மற்றும் பழங்குடி அல்லாதோர் இடையே கடந்த 3-ம் தேதி தொடங்கிய மோதல் தற்போது மிகப் பெரிய கலவரமாக மாறியுள்ளது. ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே அவ்வப்போது சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மாலை மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றடைந்தார். அங்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து கூட்டங்களை நடத்திய அவர் இரவு ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 3 நாட்கள் தங்க உள்ள அமித் ஷா, உயர் ராணுவ அதிகாரிகள், செல்வாக்கு மிக்க சமூகத் தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரைம் சந்தித்து வன்முறையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற தோனி தலைமையிலான சென்னை அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் விளையாடிய குஜராத் அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 96 ரன்களும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா 56 ரன்களும் விளாசினர். சென்னை அணி தரப்பில் பதிரானா 2 விக்கெட்டுகளும், தீபக் சாஹர், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். கண் இமைக்கும் நேரத்தில் குஜராத் அணி வீரர் சுப்மன்…
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து வந்ததால், பள்ளிகளுக்கு 2022-2023 ஆம் கல்வி ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டன. இதில், குறிப்பாக புதுச்சேரி மாநிலத்தில், கடந்த ஏப்ரல் 19 ம் தேதியே அனைத்துப் பள்ளிகளிலும் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்தன. இதையடுத்து, ஏப்ரல் 20ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை புதுச்சேரியில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. தென்னிந்திய பகுதிகளில் அக்னி நட்சத்திரம் முடிந்த போதிலும், வெப்ப அலை காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால், மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நீட்டித்து ஜூன் 7ம் தேதி புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியிலும் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால்…
அசாம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாமின் சோனித்பூரில் இன்று திங்கள்கிழமை காலை 8.03 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தீவிரம் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. பூமியின் உள்பகுதியில் 15 கிலோமீட்டர் ஆழத்தில் அசைவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். Earthquake of Magnitude:4.4, Occurred on 29-05-2023, 08:03:35 IST, Lat: 26.68 & Long: 92.35, Depth: 15 Km ,Region: Sonitpur, Assam, India for more information Download the BhooKamp App https://t.co/GKjIWyxS2g pic.twitter.com/Jyn2nXck2X — National Center for Seismology (@NCS_Earthquake) May 29, 2023 அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 7.48 மணிக்கு பூமி அதிர்ந்தது. அதன் தீவிரம் 4.8 ஆக பதிவாகியுள்ளது. திக்லிபூரில் இருந்து 137 கி.மீ தொலைவில் இந்த…
அசாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து புதிதாக மின்மயமாக்கப்பட்ட 182 கிலோ மீட்டர் ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அத்துடன் லும்டிங்கில் புதிதாக கட்டப்பட்டுள்ள டிஇஎம்யு, எம்இஎம்யு பணிமனைகளையும் திறந்து வைக்கிறார். கவுகாத்தியை நியூ ஜல்பைகுரியுடன் இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயிலால் பயண நேரம் 6.30 மணியில் இருந்து 5.30 மணியாகக் குறையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட், இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்திலிருந்து ராக்கெட் செலுத்தப்படவுள்ளது. போக்குவரத்து வழிகாட்டுதலுக்கான என்விஎஸ்-01 செயற்கைக்கோள் திங்கள்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது. இந்தப் பரிசோதனையின் மூலம் இந்தியாவின் வழிசெலுத்தல் அமைப்பு மேலும் மேம்படுத்தப்படும். நேவிகேஷன் சேவைகளுக்காக முன்னர் அனுப்பப்பட்ட 4 செயற்கைக்கோள்கள் ஆயுட்காலம் முடிந்துவிட்டதாகவும், அவற்றை மாற்றுவதற்காக ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒரு செயற்கைக்கோள் அனுப்பப்படுவதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
மாலை வேளையில் சிற்றுண்டியாக இந்த முட்டைகோஸ் போண்டா செய்து கொடுத்து அசத்துங்க.. இப்போது அதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: முட்டைகோஸ் – 1 உருளைக்கிழங்கு – 1 பச்சை மிளகாய் – 2 கொத்தமல்லி, கறிவேப்பிலை – தலா ஒரு கைப்பிடி பெரிய வெங்காயம் – 1 கடலை மாவு, அரிசி மாவு – தலா கால் கப் உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை: முட்டைகோஸ் போண்டா செய்வதற்கு முதலில் துருவிய முட்டைகோஸ் ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு உருளைக்கிழங்கை தோல் சீவி அதையும் துருவி எடுத்துக் கொள்ளவும். அத்துடன் இரண்டு பச்சை மிளகாய், ஒருகைப்பிடி கருவேப்பிலை, கொத்தமல்லி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயத்தையும் நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பவுலில் இந்த காய்கறிகளை எல்லாம் மொத்தமாக சேர்த்த பிறகு, கால் கப்…