ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (05-05-2024)

இன்றைய நாள் (05-05-2024) :

குரோதி-சித்திரை 22-ஞாயிறு-தேய்பிறை

நல்ல நேரம்

காலை 8:00 – 9:00

மாலை 3:30 – 4:30

கௌரி நல்ல நேரம்

காலை 10:30 – 11:30

மாலை 1:30 – 2:30

நட்சத்திரம்

இன்று மாலை 06.08 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

பூசம், ஆயில்யம்

சந்திராஷ்டமம் (ராசிப்படி)

கடகம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள்.

ரிஷபம்

தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நண்பர்கள் வகையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாகக் கிடைப்பது மகிழ்ச்சி தரும். இன்று வாராஹி தேவி வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.

மிதுனம்

காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உறவினர்கள் வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். இன்று முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கடகம்

தேவையான பணம் கையில் இருக்கும். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் மூலம் கிடைக்கும் தகவல் மகிழ்ச்சி தரும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சற்று கவனமாக இருக்கவும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். இன்று துர்க்கையை வழிபட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

சிம்மம்

பேச்சில் கோபத்தைக் குறைத்து நிதானத்தை கடை பிடிக்க வேண்டிய நாள். கொடுக்கல் – வாங்கல் போன்ற விஷயங்களில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். சிலருக்குக் கண் சம்மந்தமான பிரச்சனைகள் வந்து போகலாம். தாயாரின் உடல் நிலையில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். பெரிய முதலீடுகளை திட்டமிட்டுச் செய்யவும்.

கன்னி

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பிரச்சினைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

துலாம்

மனதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். வாழ்க்கைத் துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத் தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். மகாவிஷ்ணுவை வழிபட சிரமங்கள் குறையும்.

விருச்சிகம்

தந்தைவழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். இன்று சிவபெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

தனுசு

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் நண்பர்கள் தொடர்பு கொண்டு அலுவலகம் தொடர்பான மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்றைக் கூற வாய்ப்பு உள்ளது. வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்று.

மகரம்

எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.

கும்பம்

எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒருபகுதியைபைசல் செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மீனம்

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு தரும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் விவாதம் வரும். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ fourteen = seventeen

Back to top button
error: