ஏசி மின்சார ரயில் சேவை இன்று ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் ஏசி மின்சார ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு ஏசி மின்சார ரயில் சேவை கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரயில், துறைமுகம், பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள்கோவில், பரனூர் ஆகிய ரயில் […]