
ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி கோவில்களில் நடைபெறும் குடமுழுக்கு மற்றும் பிற சிறப்பு ஆராதனைகளுக்காக மற்ற மாவட்டங்களில் இருந்து மக்கள் வருவது இயல்பு. அந்த சமயங்களில், எந்த ஒரு அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க அம்மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், ஏப்ரல் 8 ஆம் தேதி புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி, கோயில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் மட்டும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்ரா அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஏப்ரல் 26 அன்று வேலை நாள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.