விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான தடையை ஐசிசி நீக்கியது!

இலங்கை கிரிக்கெட் வாரியம் மீது விதிக்கப்பட்ட தடையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சமீபத்தில் நீக்கியது. கடந்த ஆண்டு நவம்பரில் இலங்கை கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் நிர்வாக விவகாரங்களில் அரசு தலையீடு செய்வதை காரணம் காட்டி ஐசிசி தடை விதித்தது.

உலகக் கோப்பையில் இந்திய அணியிடம் இலங்கை அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியம் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சரால் கலைக்கப்பட்டது. இருப்பினும், கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிடுவது ஐசிசி அரசியலமைப்பிற்கு எதிரானது. இதன் காரணமாகவே இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி தடை விதித்தது. அதன் மூலம் இலங்கையில் நடைபெற இருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையும் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.

சமீபத்தில், ஐசிசி நிர்வாகக் குழு தடை முடிவை மறுபரிசீலனை செய்து தடையை நீக்க முடிவு செய்தது. இந்த தடை நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாக ஐசிசி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirty − twenty eight =

Back to top button
error: