விளையாட்டு

ஐபிஎல்-ல் இன்று டபுள் தமாகா.. முதல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ்..!

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்… இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்த போட்டியில் கொல்கத்தா அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹார்ட் ஹிட்டர் ரிங்கு சிங்கிற்கு பதிலாக பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார். லக்னோ அணியில் தேவ்தத் படிக்கல், நவீனுல் ஹக் ஆகியோருக்கு பதிலாக ஷமர் ஜோசப், தீபக் ஹூடா ஆகியோர் இறுதி அணியில் இடம் பிடித்தனர். மொஹ்சின் கானும் அணியில் இணைந்தார்.

இதேவேளை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்திலும், லக்னோ அணி 5 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ twenty nine = thirty five

Back to top button
error: