விளையாட்டு

ஐபிஎல் தொடரில் இன்று சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஆட்டம்..!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறவுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் ருத்துராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற சென்னை அணி அடுத்த இரண்டில் தோல்வியடைந்தது. கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கொல்கத்தா அணி வெற்றியை தொடர்வதில் தீவிரம் காட்டி வருகிறது. அதே சமயம் சொந்த மண்ணில் சென்னை அணி வெற்றி பாதைக்கு திரும்புமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighty eight + = ninety

Back to top button
error: