விளையாட்டு
ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்தல்: பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா போட்டி!
உலக கிரிக்கெட்டின் மிக உயர்ந்த பதவியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பதவி விளங்கி வருகிறது. இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தலைவர் பதவிக்கான தேர்தலில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா போட்டியிட இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தான் இலங்கை கிரிக்கெட் அணி மொத்தமாக ஐசிசி-யில் இருந்து வெளியேறுவதற்கு காரணம் என பல்வேறு தரப்பட்ட மக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சமயத்தில் ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்தலிலும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட இருப்பதால் ஜெய்ஷா ஆசிய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.