தமிழ்நாடுமாவட்டம்

நாடாளுமன்றத் தேர்தல்: தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி திரையரங்குகள் மூடல்..!

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் திரையரங்குகள் மூடப்படும் என தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று 100% வாக்குப்பதிவை உறுதிசெய்ய, அரசு பொது விடுமுறை அறிவித்தது. இதுமட்டுமின்றி கோயம்பேடு மார்க்கெட்டிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க தனியார் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி திரையரங்குகள் மூடப்படும் என தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

forty eight − = forty two

Back to top button
error: