தமிழகத்தில் இன்று முதல் ‘அக்னி நட்சத்திரம் ’ எனப்படும் கத்திரி வெயில் தொடங்குகிறது. இது வரும் மே 28ம் தேதி வரை நீடிக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் இன்னும் உக்கிரமாக இருக்கும்.
பொதுவாகவே கத்திரி வெயிலின் போதுதான் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகும். ஆனால், காலநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே 100 டிகிரியை தாண்டி வெப்ப நிலை பதிவாகி வருகிறது.
இதற்கிடையே, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.