தமிழ்நாடுமாவட்டம்

இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் நாளை முதல் பதிவு செய்யலாம் என்றும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமும் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking / UPI மூலம் இணையதளம் வாயிலாகவும், கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில் வங்கி வரைவோலை மூலமாக அல்லது நேரடியாகச் செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாகவும், தொலைபேசி மூலமாகவும் மாணவர்கள் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighty six − eighty five =

Back to top button
error: