இந்தியாதமிழ்நாடு

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது!

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, ‘நீட்’ நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.

2024-25-ம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு பிற்பகல் 2 மணியளவில் தொடங்கியது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 9-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ந் தேதி வரை நடைபெற்றது.

நாடு முழுவதும் 557 நகரங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தில் சுமார் ஒன்றரை லட்சம் மாணவ மாணவிகள் தேர்வெழுதுகின்றனர். பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய நீட் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ seventy five = seventy nine

Back to top button
error: