தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற நடைபயணத்தை தொடங்கி உள்ளார். இந்த நடைபயணம் நாளை திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நிறைவு பெறுகிறது.
இந்த பாதயாத்திரை நிறைவு விழாவை நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார பொதுக்கூட்டமாக நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. இதற்காக 1300 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்.
இதனால் சம்பந்தப்பட்ட இடங்களில் மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களும் ஆளில்லா விமானங்கள் அதாவது ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரென்டன்ட் தெரிவித்துள்ளார்.