உலகம்
பிரேசிலை உலுக்கிய கனமழை.. நிலச்சரிவில் சிக்கி 37 பேர் பலி!
பிரேசில் நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இது நாட்டின் வரலாற்றில் இதுவரை கண்டிராத பேரழிவு என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கியமாக தென் மாநிலமான ரியோ கிராண்டே டுசுல் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கி வருகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 74 பேர் காணாமல் போயுள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் மீட்பு பணி நடந்து வருகிறது.