தமிழகத்தின் தலைநகர் சென்னையில் டிசம்பர் மாதம் என்றாலே எதாவது சம்பவம் ஏற்பட்டு மக்களை பீதியில் உறைய வைக்கும். அந்த வகையில், சமீபத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் படிப்படியாக மீண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையை அடுத்த எண்ணுரில் தனியார் தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் நேற்று (டிச. 26) உடைப்பு ஏற்பட்டது.
அதனால், அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டது. அதன் காரணமாக எண்ணூர் சுற்றுவட்டார மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நள்ளிரவில் மக்கள் தூங்கி கொண்டிருந்த சமயத்தில் இந்த சம்பவம் ஏற்பட்டதால் மக்கள் பதற்றம் அடைந்தனர். உடனே, அங்கே விரைந்த போலீசார் அவர்களை அழைத்து அமைதிப்படுத்தினார்கள். பின் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.