விளையாட்டு
வருகிற 22 ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டி ஆரம்பம்.. பயிற்சியை தொடங்கிய மகேந்திர சிங் தோனி..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது பயிற்சியை தொடங்கினார். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்த மாதம் 22ஆம் தேதி சென்னையில் துவங்க உள்ளது.
முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ள நிலையில் சென்னை அணியின் இளம் வீரர்கள் கடந்த ஒரு வாரமாக சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இம்மாதம் 5ம் தேதி சென்னை வந்த சி.எஸ்.கே. அணியின் கேப்டன் தோனி நேற்று தனது பயிற்சி தொடங்கியுள்ளார். தோனி பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
The vintage hair.
The classic emotion.
Mahi aa Raha hai! 🦁#WhistlePodu 🦁💛 @msdhoni pic.twitter.com/c7QozJWWbk— Chennai Super Kings (@ChennaiIPL) March 7, 2024