விளையாட்டு

ஐ.பி.எல்-2024 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில்தான் நடைபெறும் – ஐ.பி.எல் தலைவர் அருண் துமால்

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் தான் நடைபெறும் என்று ஐ.பி.எல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் தொடங்கும் உத்தேச தேதி குறித்து பேசிய அவர், பெரும்பாலும் மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என கூறினார்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து பேசிய அருண் துமால், தேர்தல் ஆணையத்தால் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதிகள் உறுதி செய்யப்பட்ட பின்னரே ஐ.பி.எல் போட்டிகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighty nine − seventy nine =

Back to top button
error: