சினிமா
கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நடிகை தீபிகா படுகோன்
பாலிவுட்டில் ஸ்டார் தம்பதிகளாக இருப்பவர்கள் தீபிகா படுகோன் – ரன்வீர் சிங். நீண்ட நாள் காதலித்து வந்த இவர்கள், கடந்த 2018-ஆம் ஆண்டு அன்று திருமணம் செய்துக் கொண்டனர்.
இந்நிலையில், இந்த தம்பதி தங்களது சமூக வலைதளப் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கடைசியாக எங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறோம் என்று பதிவிட்டிருந்தனர்.
சோசியல் மீடியாவில் இந்த பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே, டிரெண்ட் ஆக ஆரம்பித்தது. மேலும், ரசிகர்களும், தங்களது வாழ்த்து மழையை பொழிய ஆரம்பித்தனர்.