Uncategorized
பிரான்ஸ்-உக்ரைன் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்!
பிரான்ஸ் மற்றும் உக்ரைன் இடையே இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் இன்று வியாழக்கிழமை கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் கையெழுத்திட்டனர். பிரான்சின் எலிசி அரண்மனையில் நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தின் விவரங்கள் இரு நாடுகளும் வெளியிடவில்லை.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, ஜெலென்ஸ்கியின் மூன்றாவது பாரிஸ் பயணத்தின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது. முன்னதாக, அவர் பிப்ரவரி மற்றும் மே 2023 இல் பாரிஸ் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.