Uncategorized

இஸ்ரேல்–பாலஸ்தீன மோதல்: காசாவில் இதுவரை 9,000 பெண்கள் உயிரிழப்பு

காசாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 63 பெண்கள் கொல்லப்படுவதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது வரை 9 ஆயிரம் பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதாகவும் கூறியுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தன்று, காசாவில் உள்ள பெண்கள் இந்த கொடூரமான போரின் விளைவுகளைத் தொடர்ந்து சகித்துக் கொண்டிருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளது.

இதனிடையே இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை கூறியுள்ளது. 72 ஆயிரத்து 402 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighty nine − 86 =

Back to top button
error: