Uncategorized
பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் இரண்டாவது முறையாக பதவியேற்பு
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப், தொடர்ந்து இரண்டாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் 33வது பிரதமராக 72 வயதான ஷெபாஸ் பதவியேற்க உள்ளார். ஷெபாஸ் பிரதமர் பதவிக்கு PML-N மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) கூட்டணி சார்பில் போட்டியிட்டார். முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) வேட்பாளரான உமர் அயூப் கான், ஷெபாஸை எதிர்த்து போட்டியிட்டார்.
பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஷெபாஸ் ஷெரீப்புக்கு ஆதரவாக 201 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அயூப் கானுக்கு ஆதரவாக 92 வாக்குகளும் கிடைத்தன. இதன் அடிப்படையில் ஷெபாஸ் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் நாளை (திங்கட்கிழமை) பதவியேற்கிறார்.