டாக்காவில் பயங்கர தீ விபத்து – 43 பேர் பலி
வங்கதேச தலைநகர் டாக்காவில் வியாழக்கிழமை இரவு 6 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உணவகத்தில் இருந்து தீ மளமளவென பரவி மற்ற தளங்களுக்கும் பரவியது. தொடர்ந்து 2 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற சுகாதார அமைச்சர் சமந்தா லால் சென், மருத்துவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார்.
#WATCH | A massive fire that raced through a six-storey building overnight in Bangladesh's capital Dhaka has killed at least 43 people and injured dozens, the country's health minister said. 22 others are being treated at hospitals with burn wounds: Reuters
(Video Souce:… pic.twitter.com/eYCUMJG6tQ
— ANI (@ANI) March 1, 2024