Uncategorized

டாக்காவில் பயங்கர தீ விபத்து – 43 பேர் பலி

வங்கதேச தலைநகர் டாக்காவில் வியாழக்கிழமை இரவு 6 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உணவகத்தில் இருந்து தீ மளமளவென பரவி மற்ற தளங்களுக்கும் பரவியது. தொடர்ந்து 2 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற சுகாதார அமைச்சர் சமந்தா லால் சென், மருத்துவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

forty eight − = 44

Back to top button
error: