தமிழ்நாடுமாவட்டம்

காவலர், தீயணைப்பு வீரர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு இன்று நடைபெறுகிறது

தமிழகத்தில் காலியாக உள்ள 3,359 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பு வீரர் ஆகிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வை இன்று நடத்துகிறது.

இந்த தேர்வில் கலந்து கொள்ள 2 லட்சத்து 84 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை நடைபெறுகிறது. இன்று எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifty eight − = fifty two

Back to top button
error: