தமிழ்நாடுமாவட்டம்

மிக்ஜம் புயல் பாதிப்பு: நிவாரணப் பணியில் ஈடுபட தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் அழைப்பு

சென்னையில் மிக்ஜம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சில பகுதிகளில் மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது மழை ஓய்ந்து இருக்கும் நிலையில், படிப்படியாக படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது.

இந்நிலையில், நிவாரணப் பணிகளில் ஈடுபட தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் நம்மைச் சூழ்ந்திருக்கும் மிக்ஜம் புயல் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களையப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.களத்தில் இறங்கி உதவிகள் செய்துகொண்டிருக்கும் கழகத்தினருடன், இன்னும் பல தோழர்கள் உடனே தோள் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாதிப்புகளில் இருந்து மீண்ட பகுதிகளைச் சேர்ந்த கழகத் தோழர்கள் விரைந்து வாருங்கள் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − = thirteen

Back to top button
error: