தமிழ்நாடுமாவட்டம்

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக, தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கணேசன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி ரயில்வே யார்டில் தண்ணீர் அதிகளவில் இருப்பதால், அவ்வழியாக செல்லக்கூடிய ரயில்கள் அனைத்தும் கோவில்பட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

75 − = seventy three

Back to top button
error: