தமிழ்நாடுமாவட்டம்

கனமழை எதிரொலி: இந்த ரயில்கள் எல்லாம் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு

தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் (டிச.16) முதல் கனமழை பெய்து வருவதால், பெரும்பாலான குடியிருப்புகள், ரயில் நிலையங்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடுகிறது. இதனால் நெல்லை to சென்னை செல்லும் வந்தே பாரத் ரயில் இறுமார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது மட்டுமல்லாமல் நெல்லை to ஜாம் நகர், திருச்செந்தூர் to பாலக்காடு, நாகர்கோவில் to கோவை, சென்னை எழும்பூர் to குருவாயூர், திருச்சி to திருவனந்தபுரம் ஆகிய ரயில்களின் இயக்கங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், முத்துநகர் சென்னை – திருச்செந்தூர் விரைவு ரயில், நிஜாமுதீன் to கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

56 − fifty four =

Back to top button
error: