மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இது தவிர பொதுமக்களின் வாகனங்கள், சான்றிதழ்கள், ஆவணங்கள், மின்சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களும் மழை வெள்ளத்தால் சேதமடைந்தன.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில் வரும் 16ஆம் தேதி முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இன்று முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து வரும் 17ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.