தமிழ்நாடுமாவட்டம்

அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் 4 மாவட்டங்களில் ஏற்கெனவே அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 13ஆம் தேதி மொழிப்பாடமும், வரும் 14ஆம் தேதி விருப்ப மொழிப்பாடமும், வரும் 15ஆம் தேதி ஆங்கில பாடத்தேர்வும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 18ஆம் தேதி கணிதத் தேர்வும், 20ஆம் தேதி அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளது.

தொடர்ந்து, வரும் 21ஆம் தேதி உடற்கல்வி தேர்வும், 22ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதேபோல், 11ம் மற்றும் 12ம் வகுப்புக்கான தேர்வுகள் வரும் 13ம் தேதி தொடங்கி 22ம் தேதி நிறைவடையுமென பள்ளிக்கல்வித்துறை அட்டவணை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = two

Back to top button
error: