தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று (டிச.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன்படி தென்காசி, தேனி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

rain tamil nadu

தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ thirty six = 42

Back to top button
error: