தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

tn rain alert 1906

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நாளை மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னையை பொருத்தவரை நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − = nine

Back to top button
error: