தமிழ்நாடுமாவட்டம்

கடலூர் மாவட்டத்திற்கு வருகிற 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர் மாவட்டத்திற்கு வருகிற 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் (சபாநாயகர் கோவில்) ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளான 27.12.2023 (புதன்கிழமை) கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் விடுமுறை நாளான 06.01.2024 – சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ninety six − ninety four =

Back to top button
error: