Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 14 ஜூலை 2026
BREAKING
ரயில்வே துறையில் 6,565 காலிப்பணியிடங்கள்: வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! நியூ இந்தியா அசூரன்ஸில் 550 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்! – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியான தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! கப்பல் கட்டும் நிறுவனத்தில் 495 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி நாள்! உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி: முடிவுக்கு வரும் போர்! ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் தொடங்கும் கப்பல் போக்குவரத்து! ரயில்வே துறையில் 6,565 காலிப்பணியிடங்கள்: வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! நியூ இந்தியா அசூரன்ஸில் 550 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்! – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியான தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! கப்பல் கட்டும் நிறுவனத்தில் 495 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி நாள்! உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி: முடிவுக்கு வரும் போர்! ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் தொடங்கும் கப்பல் போக்குவரத்து!
Advertisement

ஐபிஎல் 2026: குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு மாஸாக முன்னேறியது பெங்களூரு! – ரஜத் படிதார் அதிரடி சதம் விளாசி சாதனை!

தர்மசாலா: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் 19-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா தற்பொழுது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்புத் தொடரில் பங்கேற்ற 10 அணிகளில், லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (18 புள்ளிகள்), குஜராத் டைட்டன்ஸ் (18 புள்ளிகள்), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (18 புள்ளிகள்) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (16 புள்ளிகள்) ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றிற்குத் தகுதி பெற்றன.

இந்த நிலையில், புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த நடப்பு சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், 2022-ஆம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும் இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுவதற்கான முதலாவது தகுதி சுற்றில் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

தர்மசாலாவில் பெங்களூருவின் ரன் மழை

இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் உள்ள அழகிய மைதானத்தில் இந்த ஆட்டம் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி முதலாவதாகக் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஜோடி, ஆரம்பம் முதலே அதிரடியாக ரன்களைக் குவிக்கத் தொடங்கியது. இவர்களின் அதிரடியால் அணியின் ரன்ரேட் ஜெட் வேகத்தில் எகிறியது.

Advertisement

வெங்கடேஷ் ஐயர்: 7 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

விராட் கோலி: அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்தபோது போல்ட் ஆகி வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து வந்த தேவ்தத் பட்டிக்கல் 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ரஜத் படிதாரின் ருத்ரதாண்டவம்

அடுத்ததாகக் கேப்டன் ரஜத் படிதார் மற்றும் குர்ணால் பாண்ட்யா ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுத்தனர். குர்ணால் பாண்ட்யா 28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் வாணவேடிக்கை காட்டிய கேப்டன் ரஜத் படிதார் வெறும் 21 பந்துகளில் தனது அதிவேக அரைசதத்தைப் பதிவு செய்தார்.

அடுத்து வந்த டிம் டேவிட் 4 ரன்னில் வெளியேறினாலும், இறுதிவரை களம் நின்று குஜராத் பந்துவீச்சைத் துவம்சம் செய்த ரஜத் படிதார், 33 பந்துகளில் 93 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களம் இருந்தார். இறுதி ஓவர்களில் ஜிதேஷ் சர்மாவும் தன் பங்கிற்கு 5 பந்துகளில் 15 ரன்கள் விளாசினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. குஜராத் தரப்பில் ரபடா, ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

திணறிய குஜராத்; பெங்களூரு அபார பந்துவீச்சு

இதனைத் தொடர்ந்து, 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, தொடக்கம் முதலே பெங்களூரு அணியின் துல்லியமான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

தொடக்க வீரர்களான சாய் சுதர்ஷன் 14 ரன்களுக்கும், கேப்டன் கில் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். நட்சத்திர ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 29 ரன்களும், நிஷாந்த் சிந்து 5 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் குஜராத் அணி பெரும் சரிவைச் சந்தித்தது. பெங்களூரு பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால், குஜராத் அணியால் ரன்களைக் குவிக்க முடியாமல் போனது.

திவேட்டியாவின் போராட்டம் வீண்; பெங்களூரு ஃபைனலுக்கு தகுதி

குஜராத் அணியில் ராகுல் திவேட்டியா மட்டும் தனியாளாகப் போராடி நிலைத்து விளையாடி அரைசதம் அடித்தார். இருப்பினும், மற்ற வீரர்களின் ஆதரவு இல்லாததால் 19.3 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்புத் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக கம்பீரமாக முன்னேறியது. பெங்களூரு அணியின் சார்பில் ஜேக்கப் டபி சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியில் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இன்னும் வாய்ப்பு முடிந்துவிடவில்லை. அவர்கள் அடுத்ததாக, எலிமினேட்டர் சுற்றில் (ஐதராபாத் – ராஜஸ்தான் இடையே) வெற்றி பெறும் அணியுடன் இரண்டாவது தகுதி சுற்றில் மோத உள்ளனர்.

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

4Uwx7J

Advertisement
Advertisement