ஆஸி.,க்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!
ராய்ப்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், மிகக் கடினமான இலக்குடன் களம் இறங்கிய ஆஸி., அணியை, இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக வீழ்த்தினர். 175 ரன்களை துரத்திய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி… 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என கைப்பற்றியது.
அஸ்கர் படேல் 3, தீபக் சாஹர் 2, ரவி பிஷ்னோய் 1, அவேஷ் கான் 1 விக்கெட் வீழ்த்தினர். இறுதியில் ஆஸி., கேப்டன் மேத்யூ வேட் போராடியும் பலனில்லை. வேட் 23 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் எடுத்தார்.
ஆஸி. இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட் 31 ரன்களும், பென் மெக்டெர்மாட் 19 ரன்களும், மேத்யூ ஷார்ட் 22 ரன்களும், டிம் டேவிட் 19 ரன்களும் எடுத்தனர்.
இந்தப் போட்டியில், டாஸ் இழந்து முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது.
தொடர் முடிவை அடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான பெயரளவிலான கடைசி டி20 போட்டி டிசம்பர் 3ஆம் தேதி பெங்களூரில் நடைபெறவுள்ளது.