
இந்த நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளை இந்திய பங்குச் சந்தைகள் நஷ்டத்தில் முடித்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடவிருந்ததால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்தனர். ஆட்டோமொபைல் மற்றும் ஐடி பங்குகளில் விற்பனை அழுத்தம் சந்தைகளைப் பாதித்தது.
இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 191 புள்ளிகள் சரிந்து 77,414 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 72 புள்ளிகள் இழந்து 23,519 இல் நிலைபெற்றது.
பிஎஸ்இ சென்செக்ஸ்:
அதிக லாபம் ஈட்டிய பங்குகள்:
கோடக் வங்கி (1.88%), இந்துஸ்தான் யூனிலீவர் (1.01%), ஐசிஐசிஐ வங்கி (0.87%), டாடா மோட்டார்ஸ் (0.82%), நெஸ்லே இந்தியா (0.75%).
அதிக நஷ்டமடைந்த பங்குகள்:
இண்டஸ்இண்ட் வங்கி (-3.57%), மஹிந்திரா & மஹிந்திரா (-2.45%), எச்.சி.எல் டெக்னாலஜிஸ் (-2.20%), மாருதி (-2.10%), இன்ஃபோசிஸ் (-2.07%).