Skip to content
Daily Tamilnadu
சனி, 15 ஆகஸ்ட் 2026
BREAKING
இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! சென்னையில் நாளை மின் தடை! உங்கள் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறதா? முழு விவரம் இதோ! கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி! அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடி கைது! 15 நாள் சிறைக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! சென்னையில் நாளை மின் தடை! உங்கள் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறதா? முழு விவரம் இதோ! கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி! அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடி கைது! 15 நாள் சிறைக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!
Advertisement

மனித குளிர்சாதன பெட்டி! வெயிலில் வேலை செய்வோருக்கு ஜப்பானின் அசத்தல் கண்டுபிடிப்பு!

சுட்டெரிக்கும் வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஜப்பானின் அதிரடி தீர்வு! வெறும் 5 நிமிடங்களில் உடலைக் குளிர்விக்கும் 'மனித குளிர்சாதனப்பெட்டி' அறிமுகம்.

டோக்கியோ: உலகெங்கிலும் காலநிலை மாற்றத்தின் காரணமாக நடப்பு ஆண்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானைச் சேர்ந்த பிரபல தொழில்துறை விநியோக நிறுவனமான ‘ட்ரஸ்கோ நகாயாமா கார்ப்பரேஷன்’ (Trusco Nakayama Corporation) தொழிலாளர்களுக்காக ஒரு புதுமையான தீர்வைக் கொண்டு வந்துள்ளது. கடுமையான வெயிலில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களின் உடலை உடனடி நிவாரணமாகக் குளிர்வித்துக் கொள்ளும் வகையில், ‘மனித குளிர்சாதனப்பெட்டி’ (Human Refrigerator) என்று அழைக்கப்படும் எடுத்துச் செல்லக்கூடிய புதிய குளிரூட்டும் அறையை அந்நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘டோ ரீமன் பாக்ஸ்’ (Doreman Box) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம், வெயிலில் வேலை செய்பவர்களின் உடல் வெப்பநிலையை வெறும் ஐந்து நிமிடங்களில் இயல்பு நிலைக்குக் கொண்டு வருகிறது.

ஜப்பானில் கோடைக்கால வெப்பநிலை வரலாறு காணாத வகையில் உச்சத்தைத் தொட்டுள்ளதால், அங்குள்ள கட்டுமானத் தளங்கள், தொழிற்சாலைகள், கிடங்குகள் மற்றும் பொது நிகழ்வுகளில் பணிபுரியும் தொழிலாளர்களை வெப்பத்தாக்கத்திலிருந்து (Heatstroke) பாதுகாப்பதற்காக இந்த சாதனம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. துருப்பிடிக்காத எஃகால் (Stainless Steel) செய்யப்பட்டுள்ள இந்த அறையின் உள்ளே ஒருவர் வசதியாக அமர்ந்து ஓய்வெடுக்க முடியும்.

Advertisement

முக்கிய சிறப்பம்சங்கள்:

விரைவான குளிரூட்டல்: இந்த அறையின் உட்புற வெப்பநிலை 15°C ஆக பராமரிக்கப்படுகிறது. எனினும், உடலின் மிக முக்கியமான பகுதிகளான கழுத்து, தலை மற்றும் முதுகுப் பகுதிகளுக்கு நேரடியாக 5°C குளிர் காற்றைச் செலுத்தி, உடலை மிக விரைவாகக் குளிர்விக்கிறது.

தானியங்கி தொழில்நுட்பம்: நீண்ட நேரம் குளிர்ச்சியான சூழலில் அமர்ந்திருப்பதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைத் தடுக்க, இந்த அறையின் உள்ளே சென்று அமர்ந்த 20 நிமிடங்களுக்குப் பிறகு இது தானாகவே அணைந்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

குறைந்த மின் நுகர்வு: இது சாதாரண ஸ்பாட் ஏசிக்களை விட பாதி அளவு மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகிறது. இதன் இயக்கச் செலவு ஒரு மணி நேரத்திற்கு வெறும் 16 யென் (சுமார் 11 அமெரிக்க சென்ட்கள்) மட்டுமே ஆகும்.

தற்போது ஜப்பான் அரசாங்கம் தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கருதி வெப்பத்தாக்கத்தைத் தடுக்கும் விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ள சூழலில், இந்த கண்டுபிடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் சில்லறை விலை சுமார் 1.5 மில்லியன் யென் ஆகும். மேலும், நிறுவனங்கள் இதனை வாடகைக்கும் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு மருத்துவ சாதனம் இல்லை என்றாலும், கடுமையான வெயிலுக்கு மத்தியில் பணிகளுக்கு இடையே தொழிலாளர்கள் ஓய்வெடுக்கும் போது, அவர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் ஒரு சிறந்த பாதுகாப்பு நடவடிக்கையாக இது இருக்கும் என ட்ரஸ்கோ நகாயாமா நிறுவனத்தின் பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

kTpgej

Advertisement
Advertisement