பிரதமர் மோடியை சந்தித்தார் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி!
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்களைத் தணிக்க ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பிரதமர் நரேந்திர மோடியை இன்று செவ்வாய்க்கிழமை புதுதில்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை இணக்கமாகத் தீர்ப்பது ஆகியவை முக்கிய தலைப்புகளாக விவாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த வாங் யி, தனது பயணத்தின் […]