ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு அதிரடித் தடை: வங்கதேச வான்வழியைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு மறுப்பு!
கொல்கத்தா: இந்தியாவின் பிரபல பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் (SpiceJet), வங்கதேச அரசின் வான்வழிப் போக்குவரத்துத் துறைக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கத் தவறியதால், அந்நாட்டின் வான்வழியைப் பயன்படுத்த அந்த நிறுவனத்திற்கு வங்கதேச அரசு தடை விதித்துள்ளது. இந்த திடீர் தடையால் வடகிழக்கு மாநிலங்களுக்கான விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிலுவைத் தொகை விவகாரம் வங்கதேச வான்வெளியைப் பயன்படுத்தும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள், அதற்கான கட்டணத்தைத் (Overflying charges) அந்நாட்டு விமானப் போக்குவரத்து அதிகார […]