யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 395 அதிகாரி பணியிடங்கள்: மாதச் சம்பளம் ரூ.1.56 லட்சம் வரை – விண்ணப்பிப்பது எப்படி?
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளில் காலியாக உள்ள 395 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், மேலாளர், மூத்த மேலாளர், தலைமை மேலாளர், உதவிப் பொது மேலாளர், துணைப் பொது மேலாளர் ஆகிய பதவிகள் நிரப்பப்படும். இந்தப் பதவிகளுக்கு நிரந்தர அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
பதவியைப் பொறுத்து ஏதேனும் ஒரு பட்டம், BCom, BE/BTech, MBA, MCA, CA, CMA, CS, MTech, MSc, அத்துடன் வங்கித் துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பதவியைப் பொறுத்து வயது 22 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினருக்கு (ST) ஐந்து ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) மூன்று ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்குப் பத்து ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
இணையவழியில் விண்ணப்பிக்கப்படவுள்ள இந்தப் பதவிகளுக்கான விண்ணப்பதாரர்கள், இணையவழித் தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல், மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆவணச் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, பதவியைப் பொறுத்து, மாதச் சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,56,500 வரை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 10-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதர விவரங்களுக்கு, https://www.unionbankofindia.bank.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
How do you react to this story?
கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.
0 Comments