Uncategorized
பிலிப்பைன்ஸில் டிரக் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் 15 பேர் பலி!
பிலிப்பைன்ஸில் 160 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் டிரக் கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.
நீக்ரோஸ் தீவில் உள்ள கால்நடை சந்தைக்கு மக்களை ஏற்றிச் சென்ற ட்ரக் ஒன்று, வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
சுமார் 160 அடி பள்ளத்தாக்கில் விழுந்த நிலையில், டிரக்கின் டிரைவர் மற்றும் ஒரு பயணி உயிர் பிழைத்ததாகவும், மீதமுள்ளவர்கள் இறந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.