சென்னையை அடுத்த குன்றத்தூரில் அரசுப் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவன் தவறி விழுந்ததில் அதே பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் இரண்டு கால்களும் நசுங்கின.
காஞ்சிபுரம் மாவட்டம் கொல்லச்சேரி நான்கு சாலையில் இருந்து குன்றத்தூர் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. இந்த மாணவன் கீழே விழுந்ததும் பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. மாணவன் ரத்த வெள்ளத்தில் துடித்ததைக் கண்டதும் படியில் தொங்கிச்சென்ற சக மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். படுகாயம் அடைந்த மாணவனுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.