தமிழ்நாடுமாவட்டம்

அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை – வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் சில பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

இதனிடையே, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + four =

Back to top button
error: