தமிழகத்தில் வாக்காளர்களுக்கு ஏப்ரல் 13-ம் தேதி வரை பூத் சிலிப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள 6.23 கோடி வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணி ஏப்ரல் 2ம் தேதி முதல் தொடங்கியுள்ளது.
இதுவரை 3.60 கோடி பேருக்கு பூத் சிப்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகவலை தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். ஏப்ரல் 13ம் தேதிக்குள் பூத் சிலிப்கள் வழங்கப்படும் என்றார்.