இந்திய அஞ்சல் துறையில் 78 பணியிடங்கள் அறிவிப்பு
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குரூப் சி பிரிவின் கீழ் ஓட்டுநர் பணியிடம் காலியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக மொத்தம் 78 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காலியிடங்கள் :
ஓட்டுநர் (Ordinary Grade) – 78
தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியமானது ஆகும்.
வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
சம்பளம்:
பணியமர்த்தப்படும் நபர்களுக்கு Level – 02 படி, ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation / Absorption விதிமுறைப்படி Trade Test, Practical Test (Driving Test) என்னும் தேர்வு முறைகளின் படி தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.02.2024
அறிவிப்பு:
https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_29122023_Staffdriver_Ordinary_UP_English.pdf